யானையின் தாக்கத்தினால் பாதிப்புற்ற மக்கள் பிரதேச செயலாளரிடம் மகஜரினைக் கையளித்தல்−2023
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப்பனங்காடு , கண்ணகி கிராமம்- 1 மற்றும் கண்ணகி கிராமம்-2 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் யானையின் அட்டகாசத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்றின் ஊடாக
தங்களது உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்புக் கோரி இன்று (2023.03.09) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு வி.பபாகரன் ஐயா அவர்களிடம் மகஜரினை சமர்ப்பித்தனர்.
மேலும், அக்கிராம மக்களின் அன்றாட வாழ்வாதார செயற்பாடுகள், உடமைகள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் யானைகளின் அட்டகாசத்தினால் மிகவும் பாதிக்கப்படுவதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் யானைகளின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்துள்ளதுடன், அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Ministry of Rural Housing, Construction and Building Industries Industrial Development Housing Construction ProgramMinistry of Rural Housing, Construction and Building Industries Industrial Development Housing Construction Program
Aiming to the Prosperity of the Government The approval has been obtained to construct 79 houses in our Alayadiwembu Divisional Secretariat Division on a priority basis based on the impact of the war as per the National Program by 2021, of which 55 houses with a value of Rs.1,000,000.00 A total of Rs. 69,400,000.00 worth of housing construction work for 24 houses is currently being carried out by the Alayadiwembu Divisional Secretariat.
இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்: 2020 – 2025
காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சினால் 09.08.2020 ஆந் திகதிய 2187/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள குறித்த வேலைத்திட்டமானது சகல பிரதேச செயலகங்கள் மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தில் ஈடுவடுவதற்கு ஆர்வமுள்ள 18 – 45 வயதுக்கு உட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர்கள் தங்களது கிராம சேவகரிடம் விண்ணப்பப்படிவங்களைப் பெற்று, பிரதிசெய்து, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் 29.10.2020 ஆந் திகதிக்கு முன்னர் கிராம சேவகரிடம் அல்லது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறித்த வேலைத்திட்டம் சம்பந்தமான மேலதிக விபரங்களைக் கடந்த 28.09.2020 ஆந் திகதிய தினமின மற்றும் தினகரன் ஆகிய பத்திரிகைகளினூடாக அறிந்துகொள்ளலாம்.
- பிரதேச செயலாளர்
















